Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீண்டுமொரு கறுப்பு ஜூலை உருவாகலாம் | நளின் பண்டார

June 29, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மீண்டுமொரு கறுப்பு ஜூலை உருவாகலாம் | நளின் பண்டார

நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீதும் ராஜபக்ஷாக்கள் மீதும் கடும் கோபம் கொண்டுள்ளனர். பொறுமையிழந்துள்ள மக்கள் எடுக்கும் தீர்மானங்களால் மீண்டுமொரு கருப்பு ஜூலை பதிவாகக் கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.

அவ்வாறானதொரு நிலைமைக்கு இடமளித்து விட வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் சாபமாவார். அவர் பதவி விலகினால் மாத்திரமே நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள சாபம் நீங்கும். தற்போது கிணற்றுக்குள் வசிப்பது எவ்வாறு என்பதை அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது.

ஆனால் மக்களின் தேவை அதுவல்ல. கிணற்றுக்குள்ளிலிருந்து வெளியேற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். அதற்கு கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் பதவி விலகி தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று ஒன்றரை மாதங்கள் கடந்துள்ள போதிலும் , எவ்வித சர்வதேச உதவிகளும் கிடைக்கப் பெறவில்லை.

மக்கள் பொறுமையிழந்துள்ளனர். மதத் தலைவர்களுக்கு கூட கட்டுப்படும் நிலைமையில் அவர்கள் இல்லை. ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்திலுள்ளனர்.

மக்கள் அடுத்து என்ன தீர்மானத்தை எடுப்பார்கள் என்று கூற முடியாது. அடுத்த மாதம் கருப்பு ஜூலையாக பதிவாகக் கூடிய நிலைமையே காணப்படுகிறது. இதற்கு இடமளித்து விட வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

நாட்டை இவ்வாறு வங்குரோத்தடையச் செய்த ராஜபக்ஷாக்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். ஆனால் ரணில் விக்கிரமசிங்க அதனை செய்ய மாட்டார். மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களிலிருந்தும் கூட இந்த அரசாங்கம் பாடத்தைக் கற்றுக் கொள்ளவில்லை.

இந்த ஆட்சியாளர்களை பதவி விலக்குவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையுடனான நட்புறவில் இல்லை. அதனை மீண்டும் புதுபிக்க வேண்டும். அதற்கான இயலுமை இந்த அரசாங்கத்திடமில்லை என்றார்.

Previous Post

வீடுகளில் முடங்கிய மக்கள் | ஊரடங்கு காலப்பகுதி போன்று காட்சியளிக்கும் கொழும்பு

Next Post

ஜி 7 உச்சமாநாட்டில் இலங்கைக்கான இந்திய உதவிகள் குறித்து மோடி தெரிவிப்பு

Next Post
3 வேளாண் சட்டங்களும் வாபஸ் | பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு

ஜி 7 உச்சமாநாட்டில் இலங்கைக்கான இந்திய உதவிகள் குறித்து மோடி தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures