உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று தெஹிவளை மிருகக் காட்சிசாலை, பின்னவலை யானைகள் சரணாலயம் என்பவற்றை பாடசாலை மாணவர்களும், முதியவர்களும் இலவசமாக பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூழல் அபிவிருத்தி மற்றும் வனவிலங்குகள் பிரதி அமைச்சர் சுமேதா ஜயசிங்க இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
12 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் 60 வயதுக்கு கூடியவர்களுக்கும் மற்றும் பாடசாலையில் வரும் சகல மாணவர்களுக்கும் இந்த சலுகை இன்று வழங்கப்படுகின்றது.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்ச்சிகள் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.