Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி; ஜனவரி 18ஆம் திகதிவரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்

December 28, 2022
in News, Sports, முக்கிய செய்திகள்
0
மாஸ்டர்ஸ்  கூடைப்பந்தாட்ட  சுற்றுப் போட்டி;  ஜனவரி 18ஆம் திகதிவரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்

இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சங்கம், 2023ஆம் ஆண்டுக்கான அதன் முதலாவது கூடைப்பந்தாட்டப் போட்டியை கொழும்பு சுகததாச அரங்கில் 2023 பெப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டுள்ளது.

மூத்தவர்களுக்கான 6 வயதுப் பிரிவுகளில் ஏற்பாடு செயப்பட்டுள்ள இந்த சுற்றுப் போட்டியின் முதலாம் கட்டப் போட்டிகள் பெப்ரவரி 3, 4, 5ஆம் திகதிகளிலும் இறுதிச் சுற்று உட்பட இரண்டாம் கட்டப் போட்டிகள் பெப்ரவரி 10, 11, 12ஆம் திகதிகளிலும் நடத்தப்படும் என மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சங்கத் தலைவர் கயத் ஜயசிங்க தெரிவித்தார்.

போட்டிகளுக்கான பதிவுகள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் 2023 ஜனவரி 18ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பப் படிவங்களை பி ஆர் சி பெவிலியனில் சமர்ப்பிக்குமாறு கோரப்படுகிறது.

30 வயதுக்கு மேற்பட்டவர்கள், 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேறப்பட்டவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகிய 6 வயது பிரிவுகளில் இருபாலாருக்கும் லீக் முறையில் போட்டிகள் நடத்தப்படும்.

ஒவ்வொரு அணியிலும் 6 முதல் 10 வீரர்கள் அல்லது வீராங்கனைகள் பதிவு செய்யப்படவேண்டும். ஒரு வயதுப் பிரிவுக்கான அணியில் பதிவு செய்யப்படும் வீரர் அல்லது வீராங்கனை மற்றொரு வயதுப் பிரிவிலும் பங்குபற்ற அனுமதிகப்படுவார் என மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சங்க செயலாளர் பெசில் சில்வா கூறினார்.

ஒவ்வொரு அணிக்கும் போட்டி ஏற்பாட்டாளர்களினால் ஒரு தொகுதி சீருடை வழங்கப்படும். இரண்டாவது தொகுதி சீருடையை அந்தந்த அணிகள் சொந்தமாக கொள்வனவு செய்ய வேண்டும். வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான சீருடைகளின் அளவுகள் மற்றும் நிறங்கள் விண்ணப்பப் படிவங்களில் குறிப்பிடப்படவேண்டும்.

சர்வதேச கூடைப்பந்தாட்ட விதிகளுக்கு அமைய போட்டிகள் நடத்தப்படுவதுடன் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் முடிவே இறுதி தீர்மானமாகும்.

Previous Post

பாகிஸ்தான் பெற்ற 438 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து விக்கெட் இழப்பின்றி 165 ஓட்டங்கள்

Next Post

யாழ் பல்கலையில் திருவெம்பாவை பாராயணம்

Next Post
யாழ் பல்கலையில் திருவெம்பாவை பாராயணம்

யாழ் பல்கலையில் திருவெம்பாவை பாராயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures