பன்னிப்பிட்டி பகுதியில் மாணிக்ககற்கள் மற்றும் வைரக் கல் ஒன்றை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் இரத்மலானையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 38 வயதுடைய மாத்தறை மல்லி என்பவர் எனவும், அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.