சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீது நேற்றுமுன் தினம் பொலிஸார் நடாத்திய தாக்குதல் தொடர்பில் பொலிஸார் மீது விசாரணையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.
மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை அடக்க பொலிஸார் முன்னெடுத்த வழி முறை தவறானது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதனால் இவ்வாறு விசாரணை நடாத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

