பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டில் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பார் என, பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று மாத்தறையில் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார்.
கட்சியின் தேசிய மாநாடு ஓகஸ்டில் இடம்பெறுமென்றும், சுகததாச உள்ளக அரங்கில் இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் பசில் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச அறிவிக்கும் எந்தவொரு வேட்பாளரிற்கும் நிபந்தனையின்றி ஆதரவளிக்க பொதுஜன பெரமுன, கூட்டு எதிரணியினர் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.