மஹரகம பகுதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டட தொகுதியில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டதாகவும் தீக்கிரையான பொருள் மாதிரிகள் இராசாயனப்பகுப்பாய்வுகக்கு உட்படுத்தபபடவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
தீவிபத்தின் காரணமாக மூன்று வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.40 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
அதனையத்து பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அப் பகுதிக்கு விரைந்த பொலிசார் . தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேச வாசிகள் ; ஒன்றிணைந்து தீயை ஒருவாறாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீவிபத்தின் காரணமாக வர்த்தக நிலையத்தின் இரண்டு ஆடையகங்களும், கையடக்க தொலைபேசி விற்பனையமொன்றுமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. அத்துடன் இந்த தீவிபத்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயல் இல்லையென்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மின்ஒழுக்கின் காரணைமாகவே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை . தீப்பரவலின் காரணமாக உயிரிழப்புக்கள் எதுவும் சம்பவிக்கவில்லை என்பதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.