மலைவாழ் மக்களின் மகனாக மாறிய ஜெயம் ரவி
மிருதன் படத்தையடுத்து போகன் படத்தில் நடித்து முடித்துவிட்டார் ஜெயம் ரவி.
இதனையடுத்து ஏ.எல் விஜய் இயக்கும் புதிய படத்தில் பாலிவுட் நடிகை சாயிஷா சைகலுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
இப்படத்துக்கு குமரிகாண்டம் என வைத்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் வனமகன் என பெயரிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இயற்கையின் மகன் சப்டைட்டிலுடன் வெளியாகியுள்ள இப்படத்தில் மலைவாழ் மக்களின் நாயகனாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே பேராண்மை படத்தில் மலைவாழ் மக்களில் ஒருவராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.