மலேசியாவில் உடை காரணமாக 12 வயது சிறுமி செஸ் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவின் கோலாலம்பூரில் பிராந்திய செஸ்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 12 வயது சிறுமி பங்கேற்று 2 வது சுற்றை விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது தலைமை நடுவர் விதிமுறைக்கு மாறான உடை அணிந்துள்ளதாகக் கூறி தொடரிலிருந்து சிறுமியை நீக்கியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த சிறுமியின் பயிற்சியாளர் கவுசல் கந்தர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டதால் அவள் மிகவும் வருத்தத்திற்கு ஆளாகிவிட்டாள் என கூறியுள்ளார்
மேலும், தனது பேஸ்புக் பக்கத்திலும் இதைப்பற்றி கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். போட்டியின் இயக்குனர் மற்றும் நடுவர்களின் செயலுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.