மறு அறிவித்தல் வரை சோளப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வேண்டாம் என்று விவசாய பிரதிப் பணிப்பாளர் அனுர விஜயதுங்க அறிவித்துள்ளார்.
நாடாளாவிய ரீதியில் படைப்புழுவின் தாக்கத்துக்கு உள்ளான சுமார் ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சோள பயிர்ச்செய்கை முற்றாக அழிவடைந்துள்ளது.
பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட பாதிப்புத் தொடர்பிலான ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே மறு அறிவித்தல் வரை சோளப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.