மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் பகுதியிலிருந்து ஒரு தொகுதி பீடி சுற்றும் இலைகள் மீட்கப்பட்டுள்ளன.
அத்தோடு பீடி சுற்றும் இலைகளைக்கொண்ட பொதிகள் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நேற்று இவை மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, ஓலைத் தொடுவாய் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 12 மூட்டைகளில் 385 கிலோ கிராம் எடை கொண்ட பீடி சுற்றும் இலைகள் மீட்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிறுப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட பீடி சுற்றும் இலைகளைக்கொண்ட பொதிகள் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று காலை ஒப்படைக்கப்பட்ட நிலையில், குறித்த பொதிகளை மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க பார்வையிட்டார்.
விசாரனைகளின் பின்னர் குறித்த பொதிகள் யாழ். சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.