மனை­வியை­ கொலை செய்து சூட்­கேஸில் அடைத்து வீசிய கணவன்!!

மனை­வியை­ கொலை செய்து சூட்­கேஸில் அடைத்து வீசிய கணவன்!!

நடத்­தையில் சந்­தேகம் ஏற்­பட்­டதால் காதல் மனை­வியை கொன்று, துண்டு, துண்­டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து காட்டுப் பகு­தியில் டாக்டர் ஒருவர் வீசிய சம்­பவம் ஆந்­தி­ராவில் பர­ப­ரப்பை ஏற்படுத்தி­யுள்­ளது.

ஆந்­தி­ராவின் தர்­ம­வரம் பகு­தியைச் சேர்ந்­தவர் ஓய்வுப் பெற்ற கூட்­டு­றவு வங்கி அதி­காரி நட்­டய்யன். இவ­ரது 4ஆவது மகள் வினிதா (28).

இவரும் சித்தூர் மாவட்டம், கலி­கி­ரியைச் சேர்ந்த சுதீர்­குமார் பாபு என்­ப­வரும் கடந்த 4 ஆண்­டுக­ளுக்கு முன்பு காத­லித்து திரு­மணம் செய்து கொண்­டனர்.

சுதீர்­குமார் நெல்லூர் அரவிந்த் நகரில் மனை­வி­யுடன் தங்கியிருந்து அங்­குள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்­லூரி வைத்­தி­ய­சா­லையில் டாக்­ட­ராக பணி­யாற்றி வந்­துள்ளார். இவர்­க­ளுக்கு குழந்தைகள் இல்லை.

இந்­நி­லையில் வினி­தாவின் நடத்­தையில் கடந்த சில மாதங்­க­ளாக சுதீர்­குமார் பாபு­வுக்கு சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது. இதனால் இரு­வ­ருக்கும் இடையே அடிக்­கடி தக­ராறு ஏற்­பட்டு வந்­துள்­ளது.

இத­னி­டையே கடந்த 28ஆம் திகதி இரவு இரு­வ­ருக்கும் இடையே மீண்டும் தக­ராறு ஏற்­பட்­டதாம். இதில் கோப­ம­டைந்த சுதீர்­குமார், வினி­தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்­துள்­ளார்.

பின்னர், தனது மாமனார் நட்­டய்­ய­னுக்கு தொடர்பு கொண்டு, வினி­தா­வுக்கும், தனக்கும் ஏற்­பட்ட தகராறில் வினி­தாவை கொலை செய்து விட்­ட­தாக கூறி­விட்டு போனை துண்­டித்­துள்ளார்.

இதனால் பதற்­ற­ம­டைந்த நட்­டய்யன், வினி­தா­வைத் தொடர்பு கொண்­டுள்ளார். ஆனால் தொலை­பேசியை எடுக்­கா­த மையால், உட­ன­டி­யாக அவர்கள் அவ­சர பொலிஸ் பிரி­வுக்கு செய்து தகவல் கொடுத்­துள்ளார்.

அதன்­பேரில் நெல்லூர் பொலிஸ் நிலைய இன்ஸ்­பெக்டர் மற்றும் பொலிஸார் இருவர் சுதீர் குமாரின் வீட்­டுக்கு சென்­றுள்­ளனர். அங்கு யாரும் இல்­லா­ததால், சுதீர்­கு­மாரை பல இடங்­களில் தேடி­யுள்ளார்.

இந்­நி­லையில் கடந்த 30ஆம் திகதி நெல்­லூரில் வேறு ஒரு பகு­தியில் தலை
ம­றை­வாக இருந்த சுதீர்­கு­மாரை கைது செய்த பொலிஸார் அவ­ரிடம் விசா­ரணை நடத்­தி­யுள்­ளனர்.

இதன்­போது அவர் அளித்த வாக்­கு­மூ­லத்தில் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, “மனைவி வினிதா மீது ஏற்­பட்ட சந்­தே­கத்தால் அவரை கொலை செய்து, சட­லத்தை துண்­டு ­க­ளாக வெட்டி சூட்­கேஸில் அடைத்து ஆட்டோவில் எடுத்­துக்­கொண்டு நெல்லூர் பஸ் நிலையம் கொண்டு சென்றேன்.

பின்னர், திருப்­ப­திக்கு பஸ்ஸில் கொண்டு சென்று, அங்­கி­ருந்து ஒரு ஆட்­டோ வில் சட­லத்தை எடுத்­துக்­கொண்டு சந்­தி­ரி­கிரி மண்­டலம் பாக்­ரா­பேட்டை அருகே உள்ள காட்­டுப்­ப­கு­திக்கு கொண்டு சென்று சுமார் 20 அடி பள்­ளத்தில் வீசி­விட்டு வந்தேன்” என தெரி­வித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து நெல்லூர் பொலிஸார் கொடுத்த தக­வ­லின்­பேரில் வனப்­ப­கு­தி க்கு சென்று அழு­கிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி அங்கேயே பிரேத பரிசோதனை செய்து, சடலத்தை நெல்லூர் பொலி­ஸா­ரி­டம் ஒப்படைத்தனர். இதையடுத்து நெல்லூர் பொலி­ஸார் சுதீர்குமார் பாபுவை கைது செய்தனர்.

Share the post “மனை­வி­யின் நடத்­தையில் சந்­தேகம் : கொலை செய்து துண்டு துண்­டாக வெட்டி சூட்­கேஸில் அடைத்து வீசிய கணவன்!!”

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News