Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் தோட்டப்புற மக்களும் மீனவர்களும் பாதிப்பு | செந்தில் தொண்டமான்

August 23, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் தோட்டப்புற மக்களும் மீனவர்களும் பாதிப்பு | செந்தில் தொண்டமான்

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினால் தோட்டப்புற மக்கள், மீனவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாரிய விலை அதிகரிப்பை மின்சக்தி எரிசக்தி அமைச்சு மேற்கொள்வதற்கு கண்டனத்தை வெளியிடுவதுடன், மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்வதில் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே இவ்விலை அதிகரிப்பு குறித்து மின்சக்தி எரிசக்தி அமைச்சு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக மண்ணெண்ணெய்யை நம்பிதான் உள்ளது. மண்ணெண்ணெய் விநியோகம் சீராக இடம்பெறாமையால் அவர்களது பணிகள் கடந்த சில மாதங்களாக கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது.

கடல் உணவுகளின் விலைகளும் பாரிய அளவில் அதிகரித்திருந்தன.

இந்நிலையில் 87 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய் 253 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு தற்போது 340 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது நான்கு மடங்கு விலை அதிகரிப்பாகும். மண்ணெண்ணெய்யை நம்பி பொருளாதாரத்தை மேற்கொள்ளும் அனைத்து மக்களும் இதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பெருந்தோட்ட மக்களும் தமது அன்றாட தேவைகளுக்கும் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு மண்ணெண்ணெய்யை பயன்படுத்துகின்றனர்.

இதேபோன்று பொருளாதார ரீதியாக பின்தள்ளப்பட்ட குறைந்த வருமானத்தை கொண்ட தரப்பினரும் மண்ணெண்ணெய்யை நம்பித்தான் தமது பணிகளை முன்னெடுக்கின்றனர்.

ஆகவே, எரிசக்தி அமைச்சு உடனடியாக இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று செந்தில் தொண்டமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

Next Post

கொழும்பில் பசியால் வாடிய பிள்ளைகள் | தந்தையின் செயலால் ஏற்பட்ட நெகிழ்ச்சி

Next Post
கொழும்பில் பசியால் வாடிய பிள்ளைகள் | தந்தையின் செயலால் ஏற்பட்ட நெகிழ்ச்சி

கொழும்பில் பசியால் வாடிய பிள்ளைகள் | தந்தையின் செயலால் ஏற்பட்ட நெகிழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures