நாட்டின் சில பகுதிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தியை முழு நாட்டுக்கும் வழங்கும் விரிவான நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
“எழுச்சிபெறும் பொலனறுவை” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 180 அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
பொலன்னறுவை மட்டுமன்றி நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் இந்த பாரிய அபிவிருத்தி புரட்சி ஆரம்பிக்கப்படும். கொங்கிரீட் அபிவிருத்தியன்றி மக்களின் தேவைகள் மற்றும் அவர்களது உணர்வுகளை புரிந்துகொண்டு மக்கள் சார்பு அபிவிருத்தியான இந்த நிகழ்ச்சித்திட்டம் நாட்டு மக்களின் வாழ்க்கையை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்லும்.
மக்களிடம் கையளிக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் எதிர்கால தலைமுறையின் நலனை இலக்காகக் கொண்டதாகும் எனவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்