மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்றுவதற்கு முகத்துவாரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது மட்டக்களப்பு கடலில் முதலைகள் பெருகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காத்தான்குடி கடற்பகுதியில் அதிகளவான முதலைகள் காணப்படுவதால் பொதுமக்களும், மீனவர்களும் அச்சம் கொண்டுள்ளனர்.
முதலைகள் கரைக்கு வராமல் கடல் பகுதியிலேயே காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இந்நிலையில், முதலைகளின் நடமாட்டத்தை அவதானிக்க பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் கடற்கரையில் கூடியுள்ளனர்.