Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மகிந்தவுக்கு பிறப்பிக்கப்பட்ட கடும் அழுத்தம்! அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வெளியான தகவல்

May 3, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நவம்பர் 18 ஆம் திகதிக்கு பின் மகிந்தவுக்கு நல்ல காலமாம் பதவிகள் கிடைக்குமாம்

பொதுஜன பெரமுனவின் பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு அரசாங்கத்துக்குள் இருந்தவர்கள் தான் கடுமையான அழுத்தம் பிரயோகித்தார்கள் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

நேற்றையதினம்(01.05.2023) இடம்பெற்ற மே தின நிகழ்வுகளில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

2022 ஆம் ஆண்டு மே 09 சம்பவம் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச புத்தகம் வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தை வீழ்த்த சர்வதேச மட்டத்தில் சூழ்ச்சிகள் காலி முகத்திடல் போராட்டக்களத்தில் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடுகிறார். தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சிகளை அவர் மறந்து விட்டார்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்

மகிந்தவுக்கு பிறப்பிக்கப்பட்ட கடும் அழுத்தம்! அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்து வெளியான தகவல் | Sri Lanka Political Crisis Mahinda Rajapaksa

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாத காலப்பகுதியில் எரிபொருள், எரிவாயு, மின்விநியோக கட்டமைப்பில் திட்டமிட்ட வகையில் நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டன. பொதுஜன பெரமுனவின் பிரதமர் மகிந்தவை பதவி விலகுமாறு அரசாங்கத்துக்குள் இருந்தவர்கள் தான் கடுமையான அழுத்தம் பிரயோகித்தார்கள்.

2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவால் ஜனாதிபதியாக முடியுமாக இருந்தால் தமக்கும் ஜனாதிபதியாக முடியும் என்ற எண்ணத்தில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி உலங்கு வானூர்தியில் ஏறினார்கள். இன்று அந்த உலங்கு வானூர்தி வானத்தில் பறக்க முடியாத அளவுக்கு உள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்துக்குள் எடுத்த சூழ்ச்சிகள் முழு நாட்டுக்குள் எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது.

ஜனநாயக ரீதியில் மீண்டும் நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம். பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு

Next Post

கல்லீரல் பிரச்சனையால் நடிகர் மனோ பாலா காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி

Next Post
கல்லீரல் பிரச்சனையால் நடிகர் மனோ பாலா காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி

கல்லீரல் பிரச்சனையால் நடிகர் மனோ பாலா காலமானார் - ரசிகர்கள் அதிர்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures