மகேஷ்பாபு தற்போது தெலுங்கில் மகரிஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். வம்சி பைடிப்பள்ளி இயக்கிவரும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க, மகேஷ்பாபு நண்பனாக அல்லரி நரேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆந்திராவில் படித்துவிட்டு வெளிநாட்டிற்கு சென்று அங்கே மிகப்பெரிய தொழிலதிபராக மாறுகிறார் மகேஷ்பாபு.
இயற்கை விவசாயம் பற்றி ஆர்வம் காட்டும் மகேஷ்பாபு விவசாயம் சம்பந்தமான தனது கண்டுபிடிப்பை தனது கிராமத்தில் பயன்படுத்தி பார்ப்பதற்கென ஆந்திரா வருகிறார். வந்த இடத்தில் ஏற்படும் பிரச்சனையில் தனது உயிர் நண்பனை இழக்கிறாராம். அதன்பின் அவரது வாழ்க்கைப் பாதை எப்படி மாறுகிறது என்பதுதான் மீதி படமாம்.