Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மதுபான போத்தல்கள் சுற்றிவளைப்பு

December 3, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எரிபொருள் தட்டுப்பாட்டால் மதுபான உற்பத்தி நிறுத்தமா? |  மதுவரித் திணைக்களம் விளக்கம்!

மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்டிக்கர்கள் தொடர்பில் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டதனால் மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் மதுவரி திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் அண்மையில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கூடியது.

தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு ஜனாதிபதியிடம் கையளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை மதுவரித் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கம் ஆகியன அழைக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய, மதுவரித் திணைக்கள சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்தும் குழு திணைக்களத்தின் அதிகாரிகளிடம் வினவியது. அத்துடன் மதுவரித் திணைக்களத்தின் அதிகரித்துள்ள வருமானத்தைத் தொடர்ந்தும் பேண வேண்டியதன் அவசியம் என்றும் தொடர்ச்சியான சோதனைகளை அதிகரிப்பதன் மூலம் மதுபான போத்தல்களில் போலி ஸ்டிக்கர்களை ஒட்டும் சம்பவங்கள் குறைவடையும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.

ராமிஸ் அமைப்பின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் வினவப்பட்டது. இந்தத் தரவுக் கட்டமைப்பை ஏனைய அரசாங்க நிறுவனங்களுடன் ஒன்றிணைக்கும் நடவடிக்கையின் தற்போதைய நிலைமை குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

தற்போதுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தகவல் கட்டமைப்பை ஜனவரி 2024க்குள் செயற்படுத்த முடியும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மேலும், தற்போது வரிக் கோப்புகளின் எண்ணிக்கை சுமார் 7 லட்சமாக உள்ளதாகவும், எதிர்காலத்தில் இது 10 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்தது. இது தவிர, வருமான வரியைச் சரியாக செலுத்தும் தரப்பினரை மதிப்பிடுவதற்கான அமைப்பைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.

Previous Post

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

Next Post

சுகாதாரமற்ற முறையில் உணவுகளை விற்பனை செய்த 14 கடைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

Next Post
எரிபொருள் விவகாரம் குறித்த அமைச்சரவை தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி மனுத் தாக்கல் 

சுகாதாரமற்ற முறையில் உணவுகளை விற்பனை செய்த 14 கடைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures