நச்சுத் தன்மையான போதைப் பொருள் பயன்படுத்துவதாக கூறப்படும் அமைச்சர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமாகிய கபீர் ஹாஷிம் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
அமைச்சரவையில் கொக்கேன் பயன்படுத்தும் அமைச்சர்கள் இருப்பதாயின் அவர்களது பெயர்ப் பட்டியலை அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு முன்வைக்குமாறு கூறுங்கள். கட்சித் தலைவர் என்ற வகையில் நாம் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் எனவும் அமைச்சர் கபீர் ஹாஷிம் மேலும் குறிப்பிட்டார்.