தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் கே.பாக்யராஜ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் மனோஜ்குமார், பொருளாளர் ரமேஷ் கண்ணா முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறைக்கு கடும் கண்டம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குற்றவாளிகளுக்கு உடனடியாக கடும் தண்டனை தருவதோடு, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
கூட்டத்தில் துணை தலைவர் யார் கண்ணன், இணை செயலாளர்கள் டி.கே.சண்முகசுந்தரம், மதுரை தங்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.