Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொருளாதார நெருக்கடியால் சிறுநீரகங்களை விற்க முன்வந்த இலங்கை மக்கள் | வேட்டையாடிய கும்பல்

December 7, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
16 மாவட்டங்களில் வேகமாக பரவியுள்ள  சிறுநீரக நோய்

தொடரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வறிய குடும்பங்களை ஏமாற்றி மனித உடற்பாக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கும்பலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர்

பொரளையில் உள்ள பிரபல மருத்துவமனை சிறுநீரகம் விற்பனை செய்தமைக்காக பணத்தை தரவில்லை என பெண்ணொருவர் உட்பட ஐந்து பேர் பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

பொருளாதார நெருக்கடியின் மத்தியில் நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக மிகவும் சிரமத்தை எதிர்கொண்ட குடும்பங்களை சேர்ந்தவர்களே சிறுநீரகங்களை விற்றுள்ளனர்.

திங்கட்கிழமை பொலிஸில் சரணடைந்த முக்கிய சூத்திரதாரி கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு 15 கஜிமாவத்தையை சேர்ந்த 41 வயது நபரே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட நபர் சிறுநீரகத்தை விற்பனை செய்பவர்களிற்கும் அதனை பெற்றுக்கொள்பவர்களிற்கும் இடையில் தரகர் போல செயற்பட்டார் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதற்காக கட்டணங்களை பெற்றுக்கொண்டதுடன் மாத்திரமில்லாமல் சிறுநீரகத்தை விற்பனை செய்பவர்களிற்கு மருத்துவமனையின் நிர்வாகம் வழங்கிய பணத்தையும் இவர் மோசடி செய்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களை சட்டவைத்திய அதிகாரி முன்நிறுத்தியவேளை அவர்களில் ஒருவரின் சிறுநீரகம் அகற்றப்பட்டமை குறித்து விபரம் தெரியவந்துள்ளது.

சிறுநீரகங்களை வழங்கினால் பெரும் பணம் தருவதாக தெரிவித்தனர் ஆனால் பணம் எதனையும் தரவில்லைஎன பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரிடமிருந்து அகற்றப்பட்ட சிறுநீரகம் வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

Previous Post

தோழியின் முன்னாள் கணவரை கரம்பிடித்த ஹன்சிகா

Next Post

பல இலட்சம் உயிர்களின் தியாகம் மாவட்ட சபைக்காக அல்ல

Next Post
மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம் | தமிழ்தேசிய மக்கள் முன்னணி

பல இலட்சம் உயிர்களின் தியாகம் மாவட்ட சபைக்காக அல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures