ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்பினர்களாகவுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலரே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உறுப்புரிமை பெற்றவர்கள் என பின்வருவோரை அனுர பிரியதர்ஷன யாப்பா எம்.பி. பெயர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ, அனுர பிரியதர்ஷன யாப்பா, ரி.பீ. ரத்னாநயக்க, தாராநாத் பஸ்நாயக்க, லக்ஷ்மன் யாபா அபேவர்தன, சுமேதா பீ. ஜயசேன, சுதர்ஷனி பெர்ணாந்து புள்ளே, சுசந்த புஞ்சி நிலமே மற்றும் சந்திம வீரக்கொடி ஆகியோரே இன்று (11) இவ்வாறு அங்கத்துவம் பெற்றுள்ளனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க இன்றைய நிகழ்வுக்கு வருகை தந்திருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.