பேலியகொடை பிரதேசத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட புதிய சந்தையின் நிர்மானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த சந்தை விரைவில் திறக்கப்படவுள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் உள்ளதுடன், விசாலமான வாகனத் தரிப்பிடம், ஊழியர்களுக்கான ஓய்வு அறை, குளிரூட்டல் அறை, வங்கி வசதிகள் உட்பட பல வசதிகளும் இந்த சந்தையில் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.