Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பெரும்பான்மையை இழந்தது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் ஆளும் கூட்டணி

June 21, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
பெரும்பான்மையை இழந்தது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் ஆளும் கூட்டணி

பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இம்மாதம் 12 ஆம் திகதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இறுதிகட்ட வாக்குப்பதிவு, நேற்று நடைபெற்றது. 

இந்த வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் இன்று (20) காலை வெளியிடப்பட்டன. அதில் ஆச்சரியமளிக்கும் விதமாக அரசியல் நிபுணர்கள் கணித்தபடி, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனின் மையவாத குழுமக் கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்ற தவறியது. அக்கட்சியின், முக்கிய மந்திரிகள் பலர் தோல்வி அடைந்தனர்.

பாராளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 577 இடங்களில் அக்கட்சி 245 இடங்களைப் பெற்றது, அறுதிப் பெரும்பான்மைக்கு வரவில்லை. 577 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் பெரும்பான்மைக்கு தேவையான 289 இடங்களை விட சற்று குறைவாகவே உள்ளன. 

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், அவர் தீவிர வலதுசாரி கட்சிகளை  தோற்கடித்து, 20 ஆண்டுகளுக்கு பின், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் பிரான்ஸ் ஜனாதிபதி ஆனார்.

இந்நிலையில், இந்த முடிவு, அதிபர் தேர்தலில் மேக்ரான் பெற்ற வெற்றியை கடுமையாக பாதித்துள்ளது.  இப்போதைய சூழலில், சிறுபான்மை அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குவதா அல்லது சிறிய கட்சிகளுடன் இணைந்து பெரும்பான்மையுடன் புதிய கூட்டணியை அமைத்து கொள்வதா என்பது மேக்ரானின் விருப்பத்தை பொறுத்து அமையும். 

இந்த தேர்தலில், புதிதாக உருவாக்கப்பட்ட இடதுசாரி கூட்டணிக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்துள்ளது. அவர்கள் இரண்டாவது இடம்பிடித்து எதிர்க்கட்சியாக செயல்பட உள்ளனர். வலதுசாரி கூட்டணிக்கும் 89 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. 

இந்நிலையில், மேக்ரோனால் மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த முடியாவிட்டால், தொங்கு நாடாளுமன்றம் அமைய வாய்ப்புள்ளது. இந்த தேர்தல் முடிவுகள், வெல்ல முடியாத அவரது பிம்பத்திற்கு, ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர். 

உக்ரேன் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் முக்கிய பங்கு வகிக்க பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் முற்பட்டு வருகிறார். இந்த சூழலில், அவர் உள்நாட்டுப் பிரச்சனைகளை நோக்கி திசைதிருப்பப்பட்டுள்ளார். 

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் கூறுகையில், 

“நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைக் கருத்தில் கொண்டு, இந்த நிலைமை நம் நாட்டிற்கு ஒரு ஆபத்தை உருவாக்குகிறது. பெரும்பான்மையை உருவாக்க நாளை முதல் கடுமையாக செயலாற்றுவோம்” என்று ஒரு தொலைக்காட்சி அறிக்கையில் தெரிவித்தார். மேலும், நாட்டை ஆள உதவ அனைத்து ஐரோப்பிய சார்பு கட்சிகளையும் அணுக உள்ளதாக தற்போதைய நிதி அமைச்சர் உறுதியளித்தார்.

Previous Post

850,000 முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து

Next Post

நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கமாட்டேன் – தம்மிக பெரேரா

Next Post
நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கமாட்டேன் – தம்மிக பெரேரா

நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கமாட்டேன் - தம்மிக பெரேரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures