Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புலிகளின் தாக்குதல் பற்றிய கதை பொய் | புலிகள் இருந்த தீவுகளில் தலைவர்கள் மறைந்துள்ளனர்

May 18, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புலிகளின் தாக்குதல் பற்றிய கதை பொய் | புலிகள் இருந்த தீவுகளில் தலைவர்கள் மறைந்துள்ளனர்

விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடர்பாக தற்போது கதைக்கப்படுவதாகவும் அது பொய்யானது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி வன்முறையானது அலரி மாளிகையில் ஆரம்பமானது.இதனை வேறு கட்சிகள் மீது சுமத்தி விட்டு பிரச்சினையை மூடி மறைக்கக் கூடாது. 9 ஆம் திகதி நடைபெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் உள்ளது.

புத்தளம் கழுதை ஒன்று இரும்பு பொல்லுடன் செல்வதை நான் பார்த்தேன். அந்த கழுதையின் பின் முதுகில் ஏறி மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சென்றார்.

புலிகளின் தாக்குதல் பற்றிய கதை பொய்: பயங்கரவாதிகள் இருந்த தீவுகளில் தலைவர்கள் மறைந்துள்ளனர்

இப்படியானவர்களின் பெயர் பட்டியல் வெளியில் வந்துள்ளது. பிரதிப் பொலிஸ் மா அதிபர் தள்ளாடி செல்வதை நாங்கள் கண்டோம். பிரதிப் பொலிஸ் மா அதிபர் குண்டர்களில் தோளில் கையை போட்டுக்கொண்டு செல்கிறார்.

தண்டனை வழங்க வேண்டுமாயின் அதனை அலரி மாளிகையில் இருந்து ஆரம்பியுங்கள். எமது கட்சியினர் தவறு செய்திருந்தால் தண்டனை வழங்க வேண்டும். அன்றைய வன்முறை மக்களின் ஆத்திரத்தால் ஏற்பட்ட ஒன்று.

ஆளும் கட்சியின் கூட்டத்தில் பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவ தளபதி மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அந்த அதிகாரிகளி தொழில், வரையறை மற்றும் மதிப்பு என்ன என்பது தெரியும்.

வன்முறைச் சம்பவங்களை தடுக்க பொலிஸ் மா அதிபர், இராணுவ தளபதி வரவில்லை என்று அவர்களுக்கு சேறுபூச வேண்டிய அவசியமில்லை.

பொலிஸ் மா அதிபர் வரவில்லை என்று அவருக்கு சேறுபூசும் போது மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களுடன் காணப்பட்டார்.

பிரச்சினை பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறி சென்றால், சட்ட ரீதியாக பொலிஸ் மா அதிபர், இராணுவ தளபதியிடம் தேவையான உதவியை கோர வேண்டும். இராணுவம் சுயமாக சென்று பொலிஸாரின் கடமைகளை செய்யாது.

இராணுவத்தின் மீது குறைக்கக் கூறக் கூடாது. பொலிஸாருக்கு நான் ஒரு ஆலோசனையை வழங்குகிறேன். உங்கள் தொழிலை நீங்கள் கட்சி சார்பின்றி செய்யுங்கள். சுதந்திரமாக செய்யுங்கள்.

புலிகளின் தாக்குதல் பற்றிய கதை பொய்: பயங்கரவாதிகள் இருந்த தீவுகளில் தலைவர்கள் மறைந்துள்ளனர்

தவறு செய்யும் அரசியல்வாதிகளை சட்டத்திற்கு அப்பால் சென்று காப்பாற்றும் வேலையை செய்ய வேண்டாம். சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் காடுகளில் மறைந்துள்ளனர்.

கடந்த காலத்தில் பயங்கரவாதிகள் வைக்கப்பட்டிருந்த தீவுகளில் உங்களது(ஆளும் கட்சியினர்) தலைவர்கள் வெளியில் வர  முடியாது மறைந்துக்கொண்டுள்ளனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Previous Post

இந்தியாவில் ‘தக்காளி காய்ச்சல்’ பரவி வருகிறதா..?

Next Post

நான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வன்

Next Post
நான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வன்

நான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures