புதிய நாடாளுமன்ற அமர்வு தொடர்பாக கலந்துரையாடுவதற்காக, கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றின் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் கடந்த மாதம் 27ஆம் திகதியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முடிவுறுத்தப்பட்டது. மூன்றாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 14ஆம் திகதி நடத்தப்படுமென வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அன்றைய அமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்தல், ஆசன ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கே கட்சித் தலைவர்கள் இன்று கூடவுள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுவாரென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.