Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பீரங்கி மலர் | தீபச்செல்வன்

May 18, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பீரங்கி மலர் | தீபச்செல்வன்


சயனைடு குப்பிகளில் மண் நிறைத்து
விளையாடும் குழந்தைகள்
பூக்களை பறிக்க காடு நுழைந்தனர்
ராணுவ சீருடை அணிவிக்கப்பட்ட
காட்டு மரங்களின் இடையே
நிறுத்தப்பட்ட பீரங்களில்
கொடியெனப் பறந்தன
குருதி புரண்ட வெண் சீருடைகள்  

அகழப்பட்ட காட்டின் நடுவே
யுத்த ஒத்திகையின்
அதிரும் குரலால் நடுங்கின காடுகளின் விழிகள்
‘இனி யார்மீது யுத்தம்?’
குழந்தைகளின் முகங்களில் முடிவற்ற கேள்விகள்

காட்டின் பழங்களெல்லாம்
சயனைடு  குப்பிகளெனத் தொங்கின
குருதிக் கரைகளால் சிவந்த பாதையில்
யாரே இழுத்துச் செல்லப்பட்ட விரலடையாளங்கள்

ஒரு நாடு புதைக்கப்பட்ட நிலத்தில்
‘எப்போது வேண்டுமனாலும் யுத்தம்’ என
நீட்டி நிற்கும் ஒரு பீரங்கியின் வாய்குழல் அருகே
ஒரு காந்தள் கொடி படர்ந்தெழ
அதன் மலர்
நீர்ச் சொட்டுகளுடன் விரிந்து பூத்திருந்தது
ஒரு குழந்தையின்
புன்னகை நிரம்பிய முகமாய்.

தீபச்செல்வன்

நன்றி – ஆனந்தவிகடன் 

Previous Post

மஹிந்த உள்ளிட்ட பலருக்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடை முற்றாக நீக்கம் !

Next Post

வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Next Post
விடுவிக்கப்பட்ட காணிகளை  ஒரு மாத காலத்துக்குள் பயன்படுத்துங்கள் – ஆளுநர்

வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures