பிப்ரவரி 14-ந்தேதி பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பினர், இந்திய துணை ராணுவத்தினர் மீது நடத்திய கொடூர தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் மரணமடைந்தனர். இதற்கு இந்தியா பின்னர் பதிலடி கொடுத்து அந்த தீவிரவாத முகாம்களை அழித்தது.
இந்தநிலையில், இந்திய ராணுவம் நடத்திய இந்த தாகுதலை இந்திய நடிகர் நடிகைகள் பலரும் வரவேற்று வருகிறார்கள். ஆனால் இதற்கு வரவேற்பு தெரிவித்த பிரியங்கா சோப்ராவிற்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
யுனிசெப் நல்லெண்ண தூதுவராக இருக்கும் அவர் நடுநிலையாளராக இருக்க வேண்டும். ஆனால் அவரோ, இந்திய ஆயுதப்படைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே அவர் அந்த பதவியை வகிக்கக் கூடாது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானில் 2200 பேர் கையெழுத்திட்டு ஆன்லைனில் யுனிசெப்பிற்கு அனுப்பியுள்ளனர்.

