500 பயணிகளுடன் சென்ற ஏர் பிரான்ஸ் சூப்பர் ஜம்போ விமான இன்ஜின் மோசமாக சேதமடைந்ததாக கனடாவில் தரையிறக்கப்பட்டது.பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 496 பயணிகள், 24 ஊழியர்களுடன் கிளம்பிய அந்த விமானம் பல மணி நேர பயணத்திற்கு பின் கிரின்லாந்து வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது, இன்ஜீனில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து விமானம் கனடாவுக்கு திருப்பிவிடப்பட்டு கூஸ் பே ராணுவ தளத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சேதமடைந்த இன்ஜீன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன.