Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரமோதயவின் ஊடக அறிக்கை குறித்து விசாரணை நடத்துமாறு விசேட புலனாய்வுப் பிரிவுக்கு ரொஷான் ரணசிங்க அறிவிப்பு

November 18, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
பிரமோதயவின் ஊடக அறிக்கை குறித்து விசாரணை நடத்துமாறு விசேட புலனாய்வுப் பிரிவுக்கு ரொஷான் ரணசிங்க அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோதய விக்கிரமசிங்க கடந்த 13ஆம் திகதி வெளியிட்ட ஊடக அறிக்கை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க விளையாட்டுக் குற்றச் சட்டத்தின் கீழ் விளையாட்டுத் தொடர்பான குற்றங்கள் உள்ளடக்கப்படுகின்றன.

போட்டி நிர்ணயம், ஊழல் மோசடி, சட்டவிரோத செயற்பாட்டு முன்னெடுப்பு சட்டவிரோத சூதாட்டம் தொடர்பான விவகாரங்கள் குறித்து தனக்குத் தெரியும் என்று தேர்வுக் குழுவின் தலைவர் தெரிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக பிரமோதய விக்கிரமசிங்க, அவர் வகிக்கும் பதவியின் அடிப்படையில் இந்த அறிக்கை தீவிரமான அறிக்கை எனவும், இது தொடர்பில் சமூகத்தில் பெரும் விவாதம் உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம், இது தொடர்பில் முறையான விசாரணையை மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.

Previous Post

சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை காப்பாற்ற அமெரிக்க இயந்திரம் மூலம் மீட்பு பணி தீவிரம்

Next Post

தனிச் சிங்களச் சட்டத்தால் இலங்கையில் ஏற்பட்ட பாரிய விளைவு: அமைச்சரின் அறிவுறுத்தல்

Next Post
அரச ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்! எடுக்கப்பட்டுள்ள உடனடி நடவடிக்கை

தனிச் சிங்களச் சட்டத்தால் இலங்கையில் ஏற்பட்ட பாரிய விளைவு: அமைச்சரின் அறிவுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures