பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீபுக்கு சர்வதேச விருதொன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசியாவின் கௌரவம் என்ற விருதே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞரும் முன்னாள் ஜனாதிபதியுமான கலாநிதி அப்துல் கலாமின் பெயரில் இயங்கும் அப்துல் கலாம் முகாமைத்துவ மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தினால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

