Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமரின் சதித் திட்டம்? மீண்டும் ஆரம்பமானது சுதந்திரப் போராட்டம்..!!

January 28, 2017
in News
0
பிரதமரின் சதித் திட்டம்? மீண்டும் ஆரம்பமானது சுதந்திரப் போராட்டம்..!!

பிரதமரின் சதித் திட்டம்? மீண்டும் ஆரம்பமானது சுதந்திரப் போராட்டம்..!!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதே ரணில் விக்ரமசிங்கவின் சதித்திட்டம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார்.

ஆட்சிக் கவிழ்ப்புக்கான முதற்படி எனக் கூறப்படும் கூட்டு எதிர்க்கட்சியின் புரட்சியின் ஓர் ஆரம்பம் கூட்டம் நுகேகொடையில் இன்று இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்க மகிந்த ராஜபக்ச தேடிவைத்த அனைத்தையும் விற்று விட்டு அதன் மூலம் தனக்கு இலாபத்தை தேடிக் கொண்டு வருகின்றார்.

அதனால் அவர் எதிர்ப்பார்ப்பது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று கொள்வதே. அதற்கான சதித்திட்டத்தையே ரணில் தீட்டிக் கொண்டு வருகின்றார்.

மகிந்த எனும் புயல் ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவது உறுதி அதற்கான மக்கள் சூறாவளி இன்று புரட்சியாக எழுந்துள்ளது.

இரண்டாவது சுதந்திரப்போராட்டத்தை மகிந்த ஆரம்பித்து வெற்றி பெற்றதைப் போல் தற்போது கேடு கெட்ட ஆட்சியை கவிழ்க்க சுதந்திர போராட்டத்தை ஆரம்பித்து விட்டார்.

அதற்கான விடை இப்போது கண்முன்னே தெரிகின்றது. நாட்டை காட்டிக் கொடுத்து ஆட்சி செய்யும் ரணிலின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

தாய் நாடு இப்போது காப்பாற்றுமாறு அழுகின்றது. இந்த நாட்டை காப்பாற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தயாராக இருக்கின்றார்.

அவருக்கு நீங்கள் உதவி செய்யுங்கள். ரணிலின் முறையற்ற ஆட்சியை மீட்டு எடுத்து மகிந்தவிடம் ஒப்படைக்க நாம் அனைவரும் இணைந்து செயற்படுவோம் எனவும் கம்மன்பில தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதியும், பிரதமரும் பலா இலை மற்றும் க்ரோட்டன் இலையை உட்கொண்டு பொது மக்களுக்கு எடுத்துக்காட்டாக, இருக்க வேண்டும் என பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

உணவு பற்றாக்குறை ஏற்படுமாயின், பலா இலை மற்றும் க்ரோட்டன் இலையை உண்ணுமாறு அரசாங்கம் கேட்டுக்கொள்ளும் என்றும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த நிலையை அரசாங்கம் ஏற்படுத்துமாயின், ஜனாதிபதியும், பிரதமரும் பலா இலை மற்றும் க்ரோட்டன் இலையை உண்ணும் நேரடி தொலைக்காட்சி பதிவு ஒன்றை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கடனை பெற்று தீவிர பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது என்றும் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை குறித்த கூட்டத்திற்கு 10 இலட்சம் மக்கள் வருகை தந்துள்ளதாக கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மேடையில் தெரிவித்தமை குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

அரசாங்கத்தை எச்சரித்த கூட்டமைப்பு..! ஆட்டம் காணுமா தேசிய அரசாங்கம்..?

Next Post

மகிந்த வீட்டில் அரசு அமைச்சர்?? – பிளவுபடும் நாட்டை காக்க வெடிக்கும் புரட்சி..!!

Next Post
மகிந்த வீட்டில் அரசு அமைச்சர்?? – பிளவுபடும் நாட்டை காக்க வெடிக்கும் புரட்சி..!!

மகிந்த வீட்டில் அரசு அமைச்சர்?? - பிளவுபடும் நாட்டை காக்க வெடிக்கும் புரட்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : ஐ.எம்.எப்பிற்கு அநுர அறிவிப்பு

May 31, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

May 31, 2026
18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026

Recent News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : ஐ.எம்.எப்பிற்கு அநுர அறிவிப்பு

May 31, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

May 31, 2026
18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures