அமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமையை தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஐக்கிய தேசிய கட்சியின் 38 பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து முன்வைத்துள்ளனர்.
அவர்களுக்கு இடையிலான முரண்பாட்டை நீக்கி, ஒரே நிலைப்பாட்டில் கட்சியை முன்நடத்துமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்ற நிலையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கருத்து முரண்பாடுகள் இருப்பின் அவை குறித்து கட்சிக்குள் கலந்துரையாடி தீர்வை பெறுமாறும் பொதுவெளியில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்துமாறும் இருவருக்கும் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளமையினால் இனி குழப்பம் ஏற்படாது என ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.