நீதிமன்றத்தின் தீர்ப்பபையும் எதிர்த்து நீராவியடி பிள்ளையார் கோயிலின் தீர்த்தக்கேணிக்குள் பிக்குவின் உடல் எரிக்கப்பட்டது மிகவும் கவலைக்குரிய விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவையும் மீறி உயிரிழந்த பௌத்த தேரரின் உடல் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவத்த அவர், ‘நாம் ஒரு பூதவுடலை மதிக்கின்றோம். சட்டம், நீதியையும் மதிக்கின்றோம்.
ஆனால் இன்று மிகவும் அநாகரிகமான முறையில் ஞானசார தேரரின் தலைமையில், நீதிமன்றத்தின் தீர்ப்பபையும் எதிர்த்து நீராவியடி பிள்ளையார் கோயிலின் தீர்த்தக்கேணிக்குள் பிக்குவின் உடல் எரிக்கப்பட்டது மிகவும் கவலைக்குரிய விடயம்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இந்த செயற்பாட்டின் மூலம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எமக்கான சட்டம் நீதி நியாயம் என்பன இல்லை என்பதை இந்த நாடு நிரூபித்துள்ளது.
எங்களுக்கான நியாயமும், நீதியும் கிடைக்க வேண்டும் என மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.