பாராளுமன்றம் இன்று (19) காலை 10.30 மணிக்கு கூடவுள்ளது.
நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையின் கீழ் பாராளுமன்றம் இன்று கூடுமாயின் குழப்பமான ஒரு நிலைமை காணப்படும் என பல தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் இடம்பெற்ற விசேட விவாதத்தின் பின்னர் கடந்த ஜனவரி 24 ஆம் திகதி சபை அமர்வுகள் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய பிரதமர் யார்? அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலம் உள்ளதா? தேசிய அரசாங்கம் குறித்த ஒப்பந்தம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போதுள்ள அமைச்சரவை செல்லுபடியானதா? எதிர்க் கட்சித் தலைமை யாருக்கு? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் இன்றைய பாராளுமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது.