Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பழம்பெரும் இந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்..!

April 13, 2026
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
பழம்பெரும் இந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்..!

பழம்பெரும் இந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லே இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப் 12) மும்பையில் தனது 92 வயதில் காலமானார்.

ஆஷா போஸ்லேவுக்கு சனிக்கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தென் மும்பையில் உள்ள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சுவாச பிரச்சினை இருந்ததால், செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்றையதினம் அவர் உயிரிழந்தார்.

ஆஷா போஸ்லே, 20க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். குறிப்பாக, இந்தியில் காலத்தால் அழியாத பல பாடல்களை பாடி உள்ளார்.

தமிழில் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘செண்பகமே, செண்பகமே…’, ‘ஹேராம்’ படத்தில் இடம்பெற்ற ‘நீ பார்த்த பார்வை…’,  ‘அலை பாயுதே’ படத்தில் இடம்பெற்ற ‘செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்…’ உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இந்திய அரசின் பத்ம விபூஷண் விருது பெற்றுள்ள இவர், மறைந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கை ஆவார். ஆஷா போஸ்லே மறைவு திரையுலகினரையும், இரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Previous Post

தீபச்செல்வனின் நூல்களை இலங்கை அரசு விடுவிக்க வேண்டும் : வ.ஐ.ச. ஜெயபாலன்

Next Post

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

Next Post
பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures