Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பழமைக்கு அடையாளமாக இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்கள் அமைந்துள்ளன – மனோ

July 29, 2019
in News, Politics, World
0

இலங்கையில் இந்து சமயத்துக்கு 3,000 வருடங்களுக்கு குறையாத வரலாறு இருக்கின்றது. ஆகவே எம் நாட்டுக்கு இந்து சைவம் புது வரவல்ல என்பதையும் இந்த இந்து – பௌத்த மகா சபைக்கு மிகத்திடமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பீகாரில் நடைபெற்ற ‘தர்ம-தம்ம’ இந்து – பௌத்த மாநாட்டில் சிறப்புரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘பழமைக்கு அடையாளமாக இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்கள் அமைந்துள்ளன.

வடக்கில் நகுலேஸ்வரம், வடமேற்கில் திருக்கேதீஸ்வரம், கிழக்கில் திருக்கோணேஸ்வரம், மேற்கில் முன்னேஸ்வரம், தெற்கில் தொண்டீஸ்வரம் ஆகியவை இலங்கை தீவின் நான்கு திசைகளிலும் கடலை எல்லைகளாக கொண்ட மாவட்டங்களில் அமைந்துள்ளன.

இந்த மாநாட்டின் ‘தர்ம-தம்ம’ என்ற தலைப்பு என்னை கவர்ந்து விட்டது. ‘தர்ம’ என்பது சமஸ்கிருதம். ‘தம்ம’ என்பது பாளி. இரண்டு சொற்களினதும் அர்த்தங்கள் ஒன்றாகும். ‘தர்ம’ என்று இந்துக்கள் சொல்வதை, ‘தம்ம’ என்று பௌத்தர்கள் சொல்கிறார்கள்.

இந்து, பௌத்த நெறிகளுக்கு இடையில் வேறுபாடுகள் மிகச்சில. ஆனால் ஒருமைப்பாடுகள் அநேகம். இந்த பகிரங்க உண்மையை கணக்கில் எடுக்க, இலங்கையில் நாம் தவறி விட்டோம்.

இலங்கையில் இப்போது போர் ஓய்ந்து சமாதான யுகம் மெல்ல ஆரம்பித்துள்ளது. இந்த போரில் சிங்களம் பேசும் பௌத்தர்களும், தமிழ் பேசும் இந்துக்களும் பிரதான இரு தரப்புகளாக போரிட்டார்கள் என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

ஆகவே இன்று இலங்கையில் தேசிய ஐக்கியம் ஏற்பட வேண்டுமானால், முதலில் இந்துக்களும், பௌத்தர்களும் ஐக்கியப்பட வேண்டும். இந்த அடிப்படையில் இலங்கையில் இந்து-பௌத்த ஐக்கியத்தை நாம் ஏற்படுத்துவோம்.

இதன் அர்த்தம், இலங்கையில் இருக்கின்ற ஏனைய சகோதர மதங்களான கத்தோலிக்கம், இஸ்லாம் இரண்டையும் புறந்தள்ளுவது என்பதல்ல. முதற்கட்டமாக, ஒருமைப்பாடுகள் நிறைந்த இந்து, பௌத்த மதத்தவர்கள் ஐக்கியப்பட்டால், அது அடுத்த கட்டத்தில், அனைவரையும் அரவணைக்கின்ற, இலங்கையின் தேசிய ஐக்கியத்துக்கும் வழி வகுக்கும் என நான் நம்புகிறேன்.

சித்தார்த்த கௌதமன் தன் வாழ்நாளில் அதிக காலம் வாழ்ந்த இந்த நாலந்தா பூமிக்கு வரக்கிடைத்ததை இட்டு நானும், எனது சக அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவும், எம் தூதுக்குழுவிலுள்ள தேரர்கள், நண்பர்கள் சார்பாக எனது மகிழ்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இம்மாநாட்டின் உள்ளக தலைப்பான, ‘சத்-சித்-ஆனந்தா-நிர்வாண்’ என்பதும் என்னை கவர்ந்து விட்டது. ‘சத்’ என்றால் உண்மை. ‘சித்’ என்றால் மனம். ‘ஆனந்தா’ என்றால் மகிழ்ச்சி அல்லது பேரானந்தம்.

இவை இன்றைய இலங்கைக்கு மிகவும் பொருத்தமானவை. ‘நிர்வாண்’ என்பதை விட்டு விடுகிறேன். அது பிறகு வரட்டும். ஏனென்றால் மற்ற மூன்றையும்தான் நாம் இலங்கையில் இப்போது செய்திட முயல்கிறோம்.

கடந்த கால தவறுகளை திரும்பி பார்த்து கற்று கொள்ள விரும்புகிறோம். அதற்கு உண்மை பேச வேண்டும். பிறகு, எங்களது அணுகுமுறைகளை மாற்ற வேண்டும். அதற்கு இலங்கையில் சிங்கள-தமிழ், இந்து-பௌத்த மனங்கள் மாற வேண்டும். இவை நடந்தால் இலங்கையில் பேரானந்தம்தான். இதற்காக பல சவால்களுக்கு மத்தியில் பாடுபடுகின்ற ஒருவன், நான்.

இந்த ‘தர்ம-தம்ம’ இந்து-பௌத்த நற்செய்தியை, இங்கு கிடைத்த புதிய அனுபவங்களுடன், நானும், காமினியும் இலங்கைக்கு கொண்டு செல்கிறோம். எங்களுக்கு உங்கள் அனைவரது ஒத்துழைப்புகளும் அவசியமாக தேவை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கோட்டாவை நிபந்தனைகளுடனே ஜனாதிபதி வேட்பாளராக ஆதரிப்போம்: டிலான்

Next Post

கொலையுதிர் காலம் – 7வது முறையாக வெளியீட்டுத் தேதி மாற்றம்

Next Post

கொலையுதிர் காலம் - 7வது முறையாக வெளியீட்டுத் தேதி மாற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026

Recent News

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures