உலகின் பல பகுதிகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது.
இன்றைய சூழலில் இளைய தலைமுறையினர் மட்டுமின்றி அனைவருமே சமூகவலைதளங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதுவும் முகநூல்தான் பலரது விருப்பமாக இருக்கிறது. முகநூல் அறிமுகமான பிறகு உலகில் தகவல் தொடர்பு மிக எளிதாகியிருக்கிறது. இதன் மூலம் உலகின் ஒரு பகுதியில் நடக்கும் செய்திகளை பிற பகுதிகளுக்கு எளிதில் கொண்டு செல்ல முடிகிறது.
தகவல் தொடர்பு சாதனமாக மட்டுமின்றி பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களையும் முகநூல் கொண்டிருப்பதால் பலரும் இதை விரும்புகிறார்கள்.
இந்த நிலையில் உலகின் பல இடங்களில் நேற்று மாலை 6 மணி முதல் முகநூல் பக்கம் இயங்கவில்லை. இதுதொடர்பாக முகநூல் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், “முகநூல் வலைத்தளத்தை பயன்படுத்துவதில் சில மணி நேரங்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் சரியாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகநூல் பக்கம் முடங்குவது, ஒரு வாரத்துக்குள் இது இரண்டாவது முறையாகும். அதனால் முகநூல் பயனாளர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
முகநூல் போல்லவே இன்ஸ்டாகிராம் வலைதளமும் முடங்கியுள்ளதாக அதன் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

