பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் இன்று (01) சந்திபொன்று இடம்பெறவுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதேவேளை, நாட்டில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் சர்வதேசம் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், தொடர்ந்தும் இந்நாட்டின் தூதுவர்களினூடாக சர்வதேச நாடுகள் நாட்டின் தற்போதைய அரசியல்நிலை தொடர்பில் தலையிட்டு வருவதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தில் செயலாளர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டள்ளார்.