Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பலத்த காற்று, கடல் சீற்றம் ; கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்கை

July 2, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது

தற்போது தென்மேற்கு பருவக்காற்று நிலையின் காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்பகுதியிலும் நிலவும் காற்றின் நிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யகூடும்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யகூடும்.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாடுகளின் மேற்கு சரிவுகள், மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (50-60) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தென்மேற்கு பருவக்காற்று செயலில் உள்ள நிலை காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மேற்கு மற்றும் தெற்கு கடல் பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும்.

மழையின் நிலை:

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று:

காற்று மேற்கிலிருந்து தென்மேற்கு திசையில் வீசும் மற்றும் காற்றின் வேகம் மணிக்கு (30-40) கிலோமீற்றர் கொழும்பு அம்பாந்தோட்டையிலிருந்து காலி ஊடாக கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு (60-70) கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு (50-60) கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.

கடல் நிலை:

கொழும்பு அம்பாந்தோட்டையிலிருந்து காலி ஊடாக கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புக்கள் கொந்தளிப்புடன் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் மிதமானதாக காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் (சுமார் 2.5 – 3.0 மீ) அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அண்மித்த கரையோர கடற்பரப்புகளில் அலைகள் எழும்பும் சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே, கொழும்பிலிருந்து காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous Post

எல் சல்வாடோரில் கைதுசெய்யப்பட்டு வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்ட  படுகொலைச் சந்தேகநபர்கள் – பெண் ஒருவரும் உள்ளடக்கம்

Next Post

4 கோடி ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

Next Post
4 கோடி ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

4 கோடி ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures