ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்தவுடன் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மற்றொரு தேர்தலை நடத்துவதற்கு தான் தலைமை தாங்கப்போவதில்லை என்ற முடிவை இரண்டு மாதங்களுக்கு முன்னரே எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
தனது பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டு, அது தற்போது தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவே முதலில் ஆலோசிக்கப்பட்டதாகவும் அது சாத்தியப்படாதுபோனால் பதவி விலக தீர்மானித்திருந்ததாக தெரிவித்த அவர், தற்போது ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டதால், தேர்தலுக்குப் பின்னர் பதவி விலக தீர்மானித்ததாக சுட்டிக்காட்டினார்.