சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும், சிறிலங்கா அதிபரின் அரசிதழ் அறிவிப்பை சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் சற்று முன்னர் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
சிறிலங்கா அதிபரினால் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பாக சற்று முன்னர் உச்சநீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது,
இதன்படி, சிறிலங்கா அதிபரின் நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான அரசிதழ் அறிவிப்பு எதிர்வரும் 19ஆம் நாள் வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பையும் உச்சநீதிமன்றம் இடைநிறுத்தி வைத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.