ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதிக்கு எதிராக வடமேற்கு சிரியாவில் அமெரிக்கா நடத்திய ராணுவ தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையிலிருந்து நேற்று மாலை உரையாற்றிய அவர், கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் சிறப்பு படைகள் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் பாக்தாதி, தான் தரித்திருந்த ஆயுதங்களை வெடிக்கச் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதலுக்கும் ஐ.எஸ் அமைப்பே பொறுப்பேற்றிருந்தது.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரை தேடி ரஸ்யா, சிரியா, துருக்கி மற்றும் ஈராக் ஆகிய நாடுகளினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.