நேற்று சசிகலாவை கட்டுப்படுத்தியது யார்? இரவுவேளையில் நடந்த முக்கிய சம்பவம் என்ன?
அப்போலோ மருத்துவமனையில் கடந்த 75 நாட்களாக சிகிச்சையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு மரணமடைந்து விட்டார்.
இதன்பின் புதிய முதலமைச்சரை நியமிப்பது தொடர்பில் சசிகலா சற்று குழப்பநிலையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வந்ததும், அவர் சசிகலாவிடம் விரிவாக பேசி அவரை சமாதானப்படுத்தியுள்ளார்.
“இப்படியொரு இக்கட்டான சூழலில் இதுகுறித்து தேவையற்ற விவாதங்களை வளர்க்க வேண்டாம். இப்போதைக்கு ஓ.பி.எஸ் தொடரட்டும். ஜெயலலிதாவின் விருப்பமாகவும் ஓ.பி.எஸ் இருந்தார். எனவே, தொண்டர்கள் மத்தியிலும் பிரச்னை வராது” என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்ட பின்னரே சசிகலா அமைதியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று முதலமைச்சருக்கு அஞ்சலி செலுத்த வந்த வெங்கய்ய நாயுடு, அவ்விடத்தை விட்டு செல்லாமல் ஜெயலலிதாவின் உடலுக்கு அருகிலேயே இருந்துள்ளார்.
நாட்டில் ஒரு குழப்பகரமான சூழ்நிலை ஏற்படக்கூடாது என்பதிலும், அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதிலும் வெங்கய்ய நாயுடு மும்முறமாக இருந்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.