Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பாதுகாப்புடன் சொகுசு வாழ்க்கை வாழும் கோட்டாபய!

July 11, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு ஏற்பட்ட நிலை

நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் இருப்பது முற்றுமுழுதாக ராஜபக்சர்களின் கையாட்களாவர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 

நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

தலைவராக சாகர காரியவசம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டை வங்குரோத்தடையச் செய்து, வறுமையிலுள்ள மக்களின் எண்ணிக்கையை 70 இலட்சமாக்கி பின் கதவின் ஊடாக கடந்த ஆண்டு இந்த தினத்தில் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ச இன்று நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவ, பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் அதிசொகுசு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பாதுகாப்புடன் சொகுசு வாழ்க்கை வாழும் கோட்டாபய! | Sri Lanka Political Crisis Rajapaksa Family

நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் இருப்பது முற்றுமுழுதாக ராஜபக்சர்களின் கையாட்களாவர்.

பசில் ராஜபக்சவுக்கு மிக நெருங்கியவரும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளருமான சாகர காரியவசம் இதன் தலைவராகக் காணப்படுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது? கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்றங்களுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்கி, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் வகையிலான பிரேணையை முன்வைக்க முயற்சித்த கெடகொட இக்குழுவின் பிரிதொரு உறுப்பினராவார்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள் இதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இது கேலிக்குரிய விடயமாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இது புரியவில்லையா?

நாட்டில் ஓரளவு ஸ்திர நிலைமை ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அது தற்காலிகமானதே. இதனை நிலையானதாக்குவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார். 

Previous Post

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் புதிய அறிவிப்பு

Next Post

‘அஸ்வின்ஸ்’ படத்தின் வெற்றிக்கு அஸ்வினி தேவர்களின் ஆசியே காரணம் – வசந்த் ரவி

Next Post
‘அஸ்வின்ஸ்’ படத்தின் வெற்றிக்கு அஸ்வினி தேவர்களின் ஆசியே காரணம் – வசந்த் ரவி

'அஸ்வின்ஸ்' படத்தின் வெற்றிக்கு அஸ்வினி தேவர்களின் ஆசியே காரணம் - வசந்த் ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures