இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியகட்சகர் உள்ளிட்ட அதிகாரிகளை கைது செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களை கைது செய்ய பிடியாணை பெற்றுக் கொள்ளுமாறு குற்றப்புலானய்வுத் திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையின் அனுருத்த சம்பாயோ மற்றும் பிரதான சிறைச்சாலை அதிகாரிகளான சரத் பண்டார, நிஷாந்த சேனாரத்ன, மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளான காலிங்க களுஅக்கல ஆகியோரையே கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தம்மை கைது செய்வதை இடைநிறுத்தும் வகையிலான தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியகட்சகர் அநுருத்த சம்பாயோவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக நீதியமைச்சின் செயலாளர் எஸ் எம் மொஹமட் சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் துஷார உபுல்தெனிய ,சட்டமா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.