நீதிமன்றம் தேர்தலை நடாத்துமாறு கூறினால் கால எல்லை போதாமல் இருக்கின்றது என்பதனால், தேர்தல் நடவடிக்கைகளை தாம் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம் எனவும், நீதிமன்றம் தடை உத்தரவை வழங்கினால் தேர்தல் பணிகளை கைவிடவுள்ளோம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக சில கட்சிகள் நீதிமன்றம் செல்லவும், சில கட்சிகள் ஜனாதிபதியின் தீர்மானம் சரியானது என்ற நிலைப்பாட்டிலும் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தனியார் ஊடகமொன்றுக்கு நேற்று கருத்துத் தெரிவிக்கையில் ஆணைக்குழுவின் தலைவர் இதனைக் கூறினார்.