இது சிங்கள பௌத்த நாடு என்றும், நீதிமன்றத்தின் உத்தரவுகள் எங்களை கட்டுப்படுத்தாது என்றும் தேரர்கள் தெரிவித்ததாக சட்டதரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவையும் மீறி நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த விவகாரம் சர்ச்சசையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பௌத்த தேரர்கள் நீதிமன்ற உத்தரவு எதுவும் எங்களை கட்டுப்படுத்தாது எனக்கூறி தாக்க முற்பட்டதாக சுகாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மேலும் தெரிவித்த அவர், “பௌத்த தேரர்களின் செயற்பாடு குறித்து நீதிமன்றத்தில் முறையிடுவதற்காக நாங்கள் சென்ற சந்தர்ப்பத்தில் ஞானசார தேரர் தலைமையிலான சில பிக்குகள் எங்களை தாக்க முற்பட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காமல் பிக்குவை பாதுகாக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். இது உண்மையில் கவலைக்குரிய விடயமாகும்.
நீதிமன்றத்தின் உரிய கட்டளையை பெற்றிருந்தாலும் இந்த விவகாரத்தில் ஒன்றும் செய்யமுடியமல் போனது கவலைக்குரிய விடயம்” என அவர் மேலும் தெரிவித்தார்.