மகிந்த அணியுடன் கூட்டுச்சேர்ந்த மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குத் தேவையான 113 உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டிக்கொள்ள முடியாததை அடுத்து நாடாளுமன்றை சற்றுமுன் கலைத்துள்ளது.
மைத்திரி மஹிந்த கூட்டணி இந்த முடிவை எடுத்திருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது .
இதுவே தருணம் என்று காத்திருந்தோர் கட்சி தாவல்களில் இனி மும்முரமாக ஈடுபடுவர் .
இருப்பினும் தமிழ் அரசியல் கட்சிகள் மிக நிதானமாக செயற்ப்படவேண்டிய தருணத்தை இப்போது அடந்திருக்கின்றனர் .
நிபந்தனைகள் அற்ற ஆதரவை வழங்க தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இந்த தேர்தலில் யாருக்கும் இனக்கம் தெரிவித்தல் கூடாது .
வெறுமனே தமிழ் மக்களின் வாக்குகளை விலை பேசாது ,மக்களுக்கான முக்கிய தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு சிங்களத்துடன் நிபந்தனைகளை வைத்து பேச்சு வார்த்தைகளை நடத்தி எழுத்துமூல உடன்படிக்கைகளை செய்துகொண்டே தேர்தலுக்கான ஆதரவை வழங்க முன்வரவேண்டும் .காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் நிலைமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை தயார்ப்படுத்த வேண்டும் என easy24news.com அதிபர் கிருபா கிருசான் குறிப்பிடுகிறார் .