நாட்டின் முதல் பெண்மணியாக வரக்கூடிய தகுதியான பெண்ணை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச, தனது மூத்த மகன், நாமல் ராஜபக்சவுக்காக தேடி வருவதாக தெரியவருகிறது.
மகிந்த ராஜபக்சவின் உறவு முறை பெண்ணொருவர் அண்மையில் அவரை சந்திக்க சென்றிருந்ததுடன் ஷிரந்தி ராஜபக்சவுடன் கலந்துரையாடியுள்ளார்.
அப்போது, ராஜபக்ச குடும்பத்தின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்சவின் திருமணம் பற்றி பேசப்பட்டுள்ளதுடன் நாமல் ராஜபக்ச குறித்தும் பேசப்பட்டுள்ளது.
“ மாமி, ரோஹித்த ராஜபக்சவின் திருமணம் நிச்சயமாகி விட்டது, நாமல் அண்ணன் சம்பந்தமாக எதுவும் இல்லையா?” என உறவு முறை பெண், ஷிரந்தி ராஜபக்சவிடம் வினவியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ஷிரந்தி ராஜபக்ச, “ நாட்டின் முதல் பெண்மணியாக வரக் கூடிய தகுதி உள்ள, அரசியல் ரீதியான பெண்ணை தேடுகிறோம். இன்னும் கிடைக்கவில்லை. அதுதான் பிரச்சினை” என கூறியுள்ளார்.
இதனடிப்படையில், எதிர்கால ஜனாதிபதியின் பாரியாராகும் தகுதி உள்ள பெண்ணுக்கு வாய்ப்பு இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.